தோல்வி என்பது எனக்கில்லையே
வெற்றி வேந்தன் இயேசு முன் செல்கிறார்
அல்லேலுயா அல்லேலுயா ஜெயம் ஜெயம் - 2
1 தடைகள் எல்லாம் உடைத்தெறிவார்
அடைப்பட்ட வாசலைத் திறந்திடுவார்
யுத்தம் எனக்காய் செய்திடுவார்
காரியம் அனைத்தும் வாய்க்க செய்வார்
2 கொந்தளிக்கும் அலைகளை அடக்கிடுவார்
சீறிவரும் பெருங்காற்றை அமர்த்திடுவார்
கடல்மேல் நடந்து உதவி செய்வார்
கண்மலை மேலாய் நிறுத்திடுவார்
3 வெள்ளம்போல் சத்துரு வரும்போது
ஆவியானவர் எனக்கு ஜெயம் தருவார்
பறந்து காக்கிற பட்சிகளை போல்
சேனைகளின் கர்த்தரே காத்திடுவார்
4 கைகளில் வேலைகளை ஆசீர்வதிப்பார்
ஏற்ற காலத்தில் மழை பெய்ய செய்வார்
நல்ல பொக்கிஷமாய் வானம் திறப்பார்
பரிபூரண நன்மை உண்டாக செய்வார்
5 வெண்கலக் கதவுகளை உடைத்தெறிவார்
இரும்பு தாழ்பாள்களை முறித்திடுவார்
அந்தகாரத்தில் இருக்கும் பொக்கிஷங்களும்
புதையல்களும் எனக்கு தந்திடுவார்
No comments:
Post a Comment