Saturday, February 3, 2024

Yesuappa ummai nan parkavendum

Yesuappa ummai nan parkavendum

இயேசப்பா உம்மை நான் பார்க்க வேண்டும்


இயேசப்பா உம்மை நான் பார்க்க வேண்டும்

எப்போதும் உம்மோடு நான் பேச வேண்டும்

இதயத்தை உமக்காக படைக்கிறேன் நாதா

எல்லாமே உனக்காக கொடுக்கிறேன் தேவா


1 அன்பு உள்ளம் கொண்டவரும் நீர்தானைய்யா

அரவணைத்து காப்பவரும் நீர்தானைய்யா

 தாயைப்போல தேற்றுகின்றீர் தந்தைபோல சுமக்கின்றீர்

தாங்கி எந்நாளும் நடத்துகின்றீர்


2 உலகத்தில் காண்பவைகள் மாயைதானைய்யா

உம்மோடு இருக்கும் நேரம் இன்பம் தானைய்யா

உள்ளத்திலும் இல்லத்திலும் சந்தோஷம் தருகிறீர்

உயிர் வாழ நன்மைகளை அள்ளித் தருகிறீர்


3 இதயத்தை அறிந்தவரும் நீர்தானையா

மன ஏக்கமெல்லாம் அறிந்தவரும் நீர்தானைய்யா

நினைப்பதற்கு மேலாய் வேண்டுவதற்கு மேலாய்

நன்மைகளை தருபவரும் நீர்தானைய்யா

No comments:

Post a Comment