Thursday, March 6, 2025

Nenjirukum natkalellam

 நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்


நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்-என்
நெஞ்சத்திலே நீர்தானைய்யா 
நினைவிருக்கும் நேரமெல்லாம்-என் 
எண்ணத்திலே நீர்தானைய்யா இயேசைய்யா-4

1)கண்ணிருக்கும் நாட்களெல்லாம்-என் 
பார்வையெல்லாம் நீர்தானைய்யா கண்ணுறங்கும் நேரமெல்லாம்-என் கனவினிலும் நீர்தானைய்யா .......இயேசைய்யா......

2)காத்திருக்கும் நாட்களெல்லாம்-நான் 
கேட்பது உன் வார்த்தை ஐயா 
மூக்கிருக்கும் நேரமெல்லாம்-என் 
மூச்சே நீர்தானைய்யா......இயேசைய்யா.....

3)வாயிருக்கும் நாட்களெல்லாம்-என் 
வார்த்தையெல்லாம் நீர்தானைய்யா 
வாழ்ந்திருக்கும் நேரமெல்லாம்-என் 
வாழ்வே நீர்தானைய்யா 

4)நாவிருக்கும் நாட்களெல்லாம்- என் 
பாட்டெல்லாம் நீர்தானைய்யா
சொல்லிருக்கும் நேரமெல்லாம்- என்
செயல்களிலே நீர்தானைய்யா

5)கையிருக்கும் நாட்களெல்லாம்-என் 
வேலையிலும் நீர்தானைய்யா 
காலிருக்கும் நேரமெல்லாம்-என்
நடக்கையெல்லாம் நீர்தானைய்யா 

6)உடலிருக்கும் நாட்களெல்லாம்-என் 
உயிரே நீதானைய்யா 
ஜீவனுள்ள நேரமெல்லாம்-என் 
அசைவே நீர்தானைய்யா

No comments:

Post a Comment