Saturday, October 5, 2019

Yarum ennai nenaikatha

Yarum ennai nenaikatha
யாரும் என்னை நினைக்காத


யாரும் என்னை நினைக்காத நேரத்திலே
இயேசு என்னை நினைத்து அன்புகூர்ந்தார்
கண்ணீரின் பாதையில் நடந்த நேரம் 
கனிவோடு என்னை அணைத்துகொண்டார்

1.மனிதர்கள் அன்பு குறைந்த நேரம்
   மனதிலே பாருங்கள் நிறைந்த நேரம்
   சூழ்நிலை எல்லாம் எதிரான நேரம்
   வழி தெரியாமல் இருளான நேரம்
        இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
        எந்தன் வாழ்வை ஒளியாய் மாற்றிவிட்டார்

2.கஷ்டமும் நஷ்டமும் வந்த நேரம்
   கவலையினால் மனம் நிறைந்த நேரம்
   கசப்பாக வாழ்வே மாறிய நேரம்
   கண்ணீரால் படுக்கை நனைந்திட்ட நேரம்
        இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
        எந்தன் வாழ்வின் கசப்பை மாற்றிவிட்டார்

3.உறவு பாசம் எல்லாம் முடிந்த நேரம்
   முட்களாய் மனிதர்கள் குத்திய நேரம்
   பங்காளி பகையாளி மாறிய நேரம்
   பசுமை வறுமை சூழ்ந்த நேரம்
         இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
         எந்தன் வாழ்வில் புதுப்பாதை மாற்றிவிட்டார் 

4.வியாதியினால் சரீரம் வருந்திய நேரம்
   வேதனையால் உள்ளம் துவண்ட நேரம்
   மருத்துவர் யாவரும் கைவிட்ட நேரம்
   மருந்துகள் வேலை செய்யாத நேரம்
        இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
        எந்தன் வாழ்வில் தீப ஒளி ஏற்றிவிட்டார்

No comments:

Post a Comment