Saturday, November 23, 2019

aayiram murai appa

aayiram murai appa
ஆயிரம் முறை அப்பா 

ஆயிரம் முறை அப்பா என்று அழைத்தாலும்
என் ஆசைகள் தீர்ந்திடாது இயேசப்பா
     அப்பா அப்பா ஸ்தோத்திரம்
     இயேசப்பா ஸ்தோத்திரம்

1.பாவம் கழுவி பரிசுத்த ஆவி தந்தீர்
   பரிசுத்த வாழ்வினிலே இன்பம் தந்தீர்
   சாட்சியாக வாழ்ந்திடவே கிருபைதந்தீர்
   ஆட்சிசெய்ய இதயத்தில் குடிகொண்டீர்

2.வாலிபப் பிராயத்தில் இரட்சித்தீர்
   வாழ்க்கையை ஒளிமயமாய் மாற்றினீர்
   மதுரமான மன்னாவினால் மகிழ்ச்சி தந்தீர்
   மகிமையான உள்ளங்களில் ஜீவிக்கின்றீர்

3.உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
   ஒவ்வொரு நரம்பிலும் சுகம் தந்தீர்
   பெலவீனமான எம்மில் பெலன் தந்தீர்
   துதிகளாலும் ஸ்தோத்திரத்தாலும் புகழ செய்தீர்

4.பழைய மனித குணங்களை மாற்றினீர்
   புதுமையான புதுமனிதனாக்கினீர்
   பெரியவராம் இயேசு என்னில் வந்துவிட்டீர்
   புதியதீபம் உள்ளத்திலே ஏற்றிவைத்தீர்

5.ஆவியின் அருள் மழையை பொழிகின்றீர்
   அபிஷேகத்தால் தினமும் நிறைக்கின்றீர்
   ஆவியிலே தரிசனங்கள் தருகின்றீர்
   ஆத்துமாவை நித்திய வாழ்வில் இணைக்கின்றீர்

No comments:

Post a Comment