Saturday, November 23, 2019

ellorukum Yesu nallaver

ellorukum Yesu nallaver
எல்லோருக்கும் இயேசு நல்லவர்


எல்லோருக்கும் இயேசு நல்லவர்
என்றென்றும் இயேசு வல்லவர்
       இயேசு எனக்கும் நல்லவர்
       இயேசு உனக்கும் நல்லவர்
       என்றென்றும் மாறிடாதவர்

1.கூப்பிடும் ஏழை எளியவர்க்கெல்லாம்
   உடனடியாக பதில் தருவார்
   உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுவோர்க்கு
   அருகினிலே இயேசு வந்து உதவி செய்வார்

2.கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
   கண்ணீரை துடைத்து ஆற்றி  தேற்றுவார்
   நோய்களினாலே வருந்தும்போதெல்லாம்
   நொடிப்பொழுதே இயேசு சுகம்தருவார்

3.மனதுருக்கம் நிறைந்த கர்த்தரவர்
   மன்னிக்கும் அன்பு நிறைந்தவர்
   யாராக இருந்தாலும் பேதமின்றியே
   நன்மைகளை எல்லாம் அள்ளி தருபவர்

4.துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
   துணையாக உன்னுடன் கூட இருப்பவர்
   இரவும் பகலும் உறங்காமலே
   கண்மணி போல் என்றும் காத்துக்கொள்பவர்

No comments:

Post a Comment