புதிய வருஷம் பிறந்தது
புதிய வருஷம் பிறந்தது
புதிய வாழ்வும் மலர்ந்தது
இயேசுவுக்காய் இன்னும் நான் வாழ்ந்திருப்பேன்
1)சென்ற வருஷம் முழுவதும் எபிநேசரே
இந்த வருஷம் முழுமைக்கும் இம்மானுவேலே
நடத்திடுவார் நம்மை காத்திடுவார்-2
நாளெல்லாம் கூடயிருந்து ஆசீர்வதிப்பார்
2)வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
வழுவாமல் நித்தமும் நடத்திடுவாரே
பெரியவரே இயேசு உயர்ந்தவரே-2 புதிதான பாதைகளை திறந்திடுவாரே
3)கோணலான பாதையெல்லாம் செவ்வையாக்குவார் வார்
கோலும் தடியும் கொண்டு தினம் தேற்றி நடத்துவார்
நல்லவரே இயேசு வல்லவரே-2
நம்மை கிருபை நாளெல்லாம் தந்திடுவாரே
4)தடைகளை நீக்கும் ராஜா முன்னே செல்கிறார்
பயமில்லாமல் மகிழ்ச்சியோடு சென்றிடுவோமே
பொக்கிஷமும் மறைந்த புதையல்களும்-2 பெரியவராம் இயேசு நமக்குத் தந்திடுவாரே
5)ஜாதிகளை சுதந்தரமாக்கி தருவார்
பூமியின் எல்லைகளை சொந்தமாக்குவார்
கட்டப்படா தேவ ஆலயங்கள்-2
கர்த்தர் இயேசு நிறைவாக கட்டித் தருவாரே
No comments:
Post a Comment