Thursday, August 29, 2019

ஏழைகளின் தெய்வமே

Ezhaigaalin daivamae yesu magarajanae
ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே

ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே
ஏழை என்னில் அன்புகூர்ந்தீரே - என் இயேசைய்யா

1.பாசம் கொண்டீர் நேசம் கொண்டீர்
   பரிவாக சேர்த்துக்கொண்டீர்
   பாரில் என்னை கண்டு கொண்டீரே - என் இயேசைய்யா
   ஒன்றும் இல்லாத நேரத்திலும் அன்பாலே கவர்ந்து கொண்டீர்
   நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2

2.தேடி வந்தீர் ஓடி வந்தீர்
   வாழ்வினிலே தெரிந்து கொண்டீர்
   ஏழை என்னை நேசித்த தேனோ- என் இயேசைய்யா
   தனிமையில் தவித்த போது துணையாக வந்த தெய்வம்
   நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2

3.அன்பு இல்லை உண்மையில்லை
   அதற்கேற்ற அறிவும் இல்லை
   ஆனாலும் பாசம் கொண்டே- என் இயேசைய்யா
    ஏழை என்று வெறுக்காமல் ஏற்றுக் கொண்ட தெய்வமே
    நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2

4.கண்டுகொண்டேன் அறிந்து கொண்டேன்
   புரிந்து வாழ வந்தேன்
   ஏற்றுக் கொள்ளும் இயேசு ஐயரே- என் இயேசைய்யா
   தாயைப்போல் அணைத்துக்கொண்டு தந்தை போல சுமப்பவரே
   நேசரே உமது கரத்தில் அர்ப்பணிக்கின்றேன் -2

No comments:

Post a Comment