Thursday, August 29, 2019

கர்த்தரை தேடும் மனிதர்

Kartharai thedum manither yavarukum
கர்த்தரை தேடும் மனிதர் யாவருக்கும்


கர்த்தரை தேடும் மனிதர் யாவருக்கும்
நன்மைகள் குறைவதில்லையே
கர்த்தரை நோக்கிப் பார்த்த
வெட்கப்பட்டுப் போவதில்லை
      இல்லையே குறைவு இல்லையே
      இல்லையே வெட்கம் இல்லையே

1.ஆபிரகாம் கர்த்தரை தினமும் தேடினாதால்
   நன்மைகள் குறையவில்லையே
   ஈசாக்கு தேவனை நோக்கி பார்த்ததால்
   வெட்கப்பட்டு போனதில்லையே

2.யாக்கோபு கர்த்தரை தேடினதாலே
   இரண்டு பரிவாரம் ஆசீர் பெற்றாரே
   யோசேப்பு தேவனை நோக்கி பார்த்ததால்
   எகிப்திலே உயர்த்தி மகிழ்ந்தாரே

3.தாவீது கர்த்தரை தேடினதாலே
   எல்லாவித பயத்துக்கும் நீக்கி மீட்டாரே
   அவரை நோக்கி பார்த்ததினாலே
   பிரகாசமடைய செய்தாரே

4.நாமும் கர்த்தரை தினமும் தேடுவோம்
   நாளுக்கு நாள் விருத்தியடைய செய்வாரே
  ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
  தந்து நம்மையும் மகிழ செய்வாரே

No comments:

Post a Comment