Thursday, March 6, 2025

Aruvadai meguthi atkalo konjam

 அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம்


அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம் 
எஜமான் வேலையாளை அனுப்பும்படி-நாம் 
ஓயாமல் வேண்டிக் கொள்வோம் 

1)கண்ணீரோடே விதைத்தால் கெம்பீரமாய் அறுப்பாய் 
என்றார் நமது தேவன் 
கண்ணீரோடே விதைத்து முழங்காலில் ஜெபித்து 
கெம்பீரமாய் அறுத்திடுவோம் நாம் 
சபைதனில் சேர்ந்திடுவோம் 

2)காலை முதல் தினம் மாலை வரையில் அழிந்து மடிகின்றாரே 
கவனிப்பார் இல்லை விசாரிப்பார் இல்லை 
நித்தியமாய் அழிகின்றாரே நாம்
திறப்பினில் நின்றிடுவோம் 

3)இருளில் வாழும் மாந்தரை மீட்க ஒளியை ஏந்தி செல்வோம் 
மரண இருளில் வாழ்பவர்கெல்லாம் இயேசுவை காட்டிடுவோம் 
நாம் வெளிச்சமாய் வாழ்ந்திடுவோம் 
4)எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கு நடுவில் நடந்து சென்றிடுவோம் 
உலர்ந்த எலும்புகள் சேனையாய் நின்றிட 
ஜீவ வார்த்தை உரைத்திடுவோம் தேவ ஆவியில் நிறைந்திடுவோம் 
5)வழி தெரியாத மாந்தருக்கெல்லாம் 
இயேசுவே வழி என்று கூறிடுவோம் 
சத்தியம் ஜீவனாய் மாறாத தேவனை உயர்த்தியே காட்டிடுவோம்-நாம் 
உண்மையாய் வாழ்ந்திடுவோம்

Nenjirukum natkalellam

 நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்


நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்-என்
நெஞ்சத்திலே நீர்தானைய்யா 
நினைவிருக்கும் நேரமெல்லாம்-என் 
எண்ணத்திலே நீர்தானைய்யா இயேசைய்யா-4

1)கண்ணிருக்கும் நாட்களெல்லாம்-என் 
பார்வையெல்லாம் நீர்தானைய்யா கண்ணுறங்கும் நேரமெல்லாம்-என் கனவினிலும் நீர்தானைய்யா .......இயேசைய்யா......

2)காத்திருக்கும் நாட்களெல்லாம்-நான் 
கேட்பது உன் வார்த்தை ஐயா 
மூக்கிருக்கும் நேரமெல்லாம்-என் 
மூச்சே நீர்தானைய்யா......இயேசைய்யா.....

3)வாயிருக்கும் நாட்களெல்லாம்-என் 
வார்த்தையெல்லாம் நீர்தானைய்யா 
வாழ்ந்திருக்கும் நேரமெல்லாம்-என் 
வாழ்வே நீர்தானைய்யா 

4)நாவிருக்கும் நாட்களெல்லாம்- என் 
பாட்டெல்லாம் நீர்தானைய்யா
சொல்லிருக்கும் நேரமெல்லாம்- என்
செயல்களிலே நீர்தானைய்யா

5)கையிருக்கும் நாட்களெல்லாம்-என் 
வேலையிலும் நீர்தானைய்யா 
காலிருக்கும் நேரமெல்லாம்-என்
நடக்கையெல்லாம் நீர்தானைய்யா 

6)உடலிருக்கும் நாட்களெல்லாம்-என் 
உயிரே நீதானைய்யா 
ஜீவனுள்ள நேரமெல்லாம்-என் 
அசைவே நீர்தானைய்யா

Saturday, March 1, 2025

Ennai kaanbavarae en idaiyathai

 என்னைக் காண்பவரே 



என்னைக் காண்பவரே 
என் இதயத்தை அறிந்தவரே 
என் பாரம் ஏக்கமெல்லாம்-2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்-2 என்னை
 
1)கண்ணீரெல்லாம் துடைப்பவர் நீர் 
கஷ்டமெல்லாம் தீர்ப்பவர் நீர் 
நோய்களெல்லாம் குணமாக்கி 
சுகமான வாழ்வை தருபவர் நீர்

2)விண்ணப்பங்களை கேட்பவர் நீர் 
தவறாமல் பதிலையும் தருபவர் நீர் 
வருத்தப்படும் மாந்தருக்கு 
இளைப்பாறுதல் தினம் தருபவர் நீர் 

3)அனைத்தையும் ஆராய்ந்து அறிபவர் நீர்
உமக்கு மறைவாக எங்கே போவேன் 
உமது பார்வைக்கு மறைவான 
சிருஷ்டிகள் உலகில் ஒன்றுமில்லை 

4)நெருக்கப்படும் நேரங்களில் நெருங்கி வந்து உதவி செய்வீர் 
தள்ளாடிடும் வேலைகளில்
ஊன்று கோலாய் வந்து உதவிடுவீர்

Koda kodi thotharkal

 கோடா கோடி தூதர்கள்



கோடா கோடி தூதர்கள்
பாடி புகழும் தேவனை
ஆராதனை செய்கின்றோம் நாங்கள்-2
ஆராதனை செய்கின்றோம்

1)பரலோகில் செய்வது போல் 
பூமியிலும் செய்யும்படி 
எங்களை தெரிந்து கொண்டீரே-உமது 
இரத்தத்தால் மீட்டு கொண்டீரே-2 

2)பரிசுத்த ஆவியினால் 
பரிசுத்த வாழ்வை தந்து 
பிள்ளையாக மாற்றி விட்டீரே-உமது 
உரிமையை எமக்கு தந்திரே 

3)சத்துருவின் சகலவித 
வல்லமையை மேற்கொள்ள 
அதிகாரம் எமக்கு தந்தீரே-உமது 
வல்லமையும் எமக்கு தந்தீரே-2

4)மந்தையாம் சபைதனிலே 
சேர்ந்து உம்மை பணிந்திடவே
ஐக்கியம் எனக்கு தந்தீரே- உம்மை 
ஆராதிக்க கிருபை தந்தீரே 

5)வருகையின் நாளினிலே 
உம்மைப் போல் மாறிடவே 
மகிமையின் வாழ்வை தந்தீரே-உமது 
ஜீவ வார்த்தை தந்தீரே-2

Venpura ennilae asivadathum

 வெண்புறா என்னிலே அசைவாடட்டும் 



வெண்புறா என்னிலே அசைவாடட்டும் 
பாவ சாபங்கள் முற்றும் நீங்கி ஓடட்டும்

1)பரிசுத்த ஆவியே-என்னை 
பரிசுத்தம் ஆக்கிடுமே 
உயிர்பிக்கும் வல்ல ஆவியே-என்னை 
உயிர்ப்பித்து உருவாக்குமே 

2)பெலன் தரும் ஆவியே-என்னை 
பெலத்தால் இடை கட்டுமே 
அன்புள்ள ஆவியே 
அன்பால் நிரப்புமே 

3)சத்தியத்தின் ஆவியே-என்னை 
சத்தியத்தில் நடத்திடுமே
சாட்சியாக நிறுத்திடுமே 
சர்வ வல்ல ஆவியே 

4)வல்லமையின் ஆவியே-உமது வல்லமையை தாருமே 
வரங்களின் ஆவியே உம் 
வரங்களால் நிறைந்திடுமே 

5 )கிருபையின் ஆவியே உமது கிருபையால் தாங்கிடுமே 
நன்மை தரும் ஆவியே-உம் 
நன்மையினால் நிரம்பிடுமே

Thagapanae unthan pathathil

 தகப்பனே உந்தன் பாதத்தில் 



தகப்பனே உந்தன் பாதத்தில் 
வந்தேனைய்யா காலை நேரத்தில் (இந்த வேலை )

1)இரவெல்லாம் செட்டையின் மறைவில் 
தூங்காமல் பாதுகாத்தீர்

2)அதிகாலையில் தேடுவோர் 
கண்டடைவான் என்று சொன்னீர் 

3)புதிதான கிருபையினால் 
பாத்திரம் நிரம்ப செய்திடுமே 

4)பெலவீனமான என்னில் 
பூரணபெலன் விளங்க செய்யும் 

5)அல்பாவும் ஒமெகாவும்
ஆதியும் அந்தமும் நீயே 

6)இருள் நீக்கும் ஒளி நீரே 
அருள் நல்கும் ஆண்டவர் நீரே 

7)நன்மையினால் நிறைப்பவரே 
கிருபையினால் இரட்சிப்பவரே 

8)தகப்பன் போல சுமப்பவரே 

தாயை போல தேற்றுபவரே


9)ஆவியின் வரங்களோடு 

அபிஷேகம் செய்திடுமே

Sothiram yesaiya

 ஸ்தோத்திரம் இயேசைய்யா



ஸ்தோத்திரம் இயேசைய்யா-உமக்கு 

ஸ்தோத்திரம் இயேசைய்யா 


1)ஜீவனை தந்தீர் ஸ்தோத்திரம் 

பெலனை தந்தீர் ஸ்தோத்திரம் 

சுகத்தை தந்தீர் ஸ்தோத்திரம் 

கருணை கூர்ந்தீர் ஸ்தோத்திரம் 


2)அன்பு கூர்ந்தீர் ஸ்தோத்திரம் 

அறிவைத் தந்தீர் ஸ்தோத்திரம் 

அபிஷேகம் தந்தீர் ஸ்தோத்திரம் 

ஆளுகை செய்தீர் ஸ்தோத்திரம் 


3)பாசம் கொண்டீர் ஸ்தோத்திரம் 

பரிசுத்தம் தந்தீர் ஸ்தோத்திரம் 

இன்பம் தந்தீர் ஸ்தோத்திரம் 

இனிமையானீர் ஸ்தோத்திரம் 


4)நன்மைகள் தந்தீர் ஸ்தோத்திரம் 

கிருபைத் தந்தீர் ஸ்தோத்திரம் 

வல்லமை தந்தீர் ஸ்தோத்திரம் 

வரங்களால் நிறைத்தீர் ஸ்தோத்திரம் 


5)இம்மட்டும் காத்தீர் ஸ்தோத்திரம் 

இனிமேலும் காப்பீர் ஸ்தோத்திரம் 

யேகோவா நிசியே ஸ்தோத்திரம்  

வெற்றியை தருவீர் ஸ்தோத்திரம்

Friday, February 28, 2025

Siluvai kodi vuyaratum

 சிலுவைக் கொடி உயரட்டும்



சிலுவைக் கொடி உயரட்டும்

இயேசு நாமம் வளரட்டும்

சத்தியம் எங்கும் தொனிக்கட்டும்-ஆல்லேலூய்யா-2


1)அணி அணியாய் ஊழியர்கள் எழும்பட்டும் 

அன்பினாலே ஊழியம் செய்யட்டும் 

அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கட்டும் 

2)சத்தியத்தை தீபமாய் ஏற்றட்டும் 

சாத்தானை காலின் கீழ் மிதிக்கட்டும் வெற்றியோடு இயேசு நாமம் முழங்கட்டும் 

3)பேதைகள் ஞானிகளாய் மாறட்டும் 

பிசாசின் ராஜ்ஜியம் அழியட்டும் 

தேவனின் ராஜ்ஜியம் பெருகட்டும் 

4)இயேசுவே ஆண்டவர் என்று அறியட்டும் 

எல்லா நாவும் கர்த்தரை துதிக்கட்டும் 

துதியினாலே சாத்தான் கோட்டை இடியட்டும் 

5)கட்டப்பட்ட இதயங்கள் உடையட்டும் 

கண்ணீரோடு கர்த்தரிடம் திரும்பட்டும் 

தேவனின் ஆலயமாக வாழட்டும் 

6)ஆத்தும பாரத்தோடு ஜெபிக்கட்டும் 

அனல் கொண்டு இயேசுவுக்காய் எழும்பட்டும் 

ஆவியின் கனிகளை காணட்டும் 

7)இலாபத்தை நஷ்டமாக எண்ணட்டும் இயேசுவை நோக்கியே ஓடட்டும் 

ஆண்டவரின் ராஜ்ஜியம் சேரட்டும்

Ovandirkum ovoru kalam

 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு 



ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு 

காத்திருந்தால் தேவ கிருபை உண்டு 

நீதியின் தேவனே அனைத்தையுமே 

அதினதின் காலத்திலே செய்து முடிப்பார் 

1)பணத்தை வைத்திருப்போர் 

காரியம் வாய்ப்பதில்லை 

செல்வத்தை குவித்திருப்போர் 

தொல்லைகள் விடுவதில்லை கர்த்தரை நம்புவோர்க்கு காரியம் வாய்த்து விடும் 

ஒன்றுமில்லாத நேரம் அற்புதம் செய்திடுவார் 

2)வசதிகள் நிறைந்திருப்போர் 

வாழ்க்கை அமைவதில்லை வாழ்க்கையில் உயர்ந்திருப்போர் 

வியாதிகள் விடுவதில்லை இயேசுவை நம்புவோர்க்கு அற்புதம் செய்திடுவார் 

இன்னல் துன்பம் யாவும் ஓடிய மறைந்துவிடும் 

3)பாவத்தில் வாழ்பவர்க்கு, நிம்மதி இருப்பதில்லை, 

சாபமுள்ளோர் வீட்டில், வருமானம் தங்குவதில்லை 

இயேசுவின் தூய இரத்தம் பாவ சாபம் நீக்கிவிடும் 

இன்றே நீ திரும்பி வந்தால் நிம்மதி கிடைத்துவிடும் 

4)இரட்சணிய இரட்சண்ய நாளினிலே, இரட்சிப்பை பெற்றிடுவாய் 

அனுகிரக காலத்திலே, ஆலயம் சென்றிடுவாய் 

வானமும் மாறிடும் பூமியும் மறைந்திடும் 

கர்த்தரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திடும்

Anbu thanthaiyae en

அன்பு தந்தையே என் இறைவா



அன்பு தந்தையே என் இறைவா 

அனுதினம் போற்றுகிறேன் 


நீரல்லால் எனக்கு வாழ்வு இல்லை 

நீரல்லால் வேறு வழியும் இல்லை


1)அநாதி‌ சிநேகத்தால் அன்பு கூர்ந்தீர் காருண்யத்தால் என்னை இழுத்துக் கொண்டீர்

முடிவு வரையும் அன்பு கூர்ந்ததால் சிலுவையில் எனக்காய் பலியானீரே 

2)மெய்யாகவே என் பாடுகள் ஏற்றுக்கொண்டீர்

துக்கங்களை நீரே சுமந்தீரைய்யா

எனக்காக காயப்பட்டு நொறுக்கப்பட்டீரே

எனக்காக காயப்பட்டு நொறுக்கப்பட்டீரே இயேசுவே உமதன்பு என்றும் போதுமே 

3)உமது காயத்தால் என் நோய்களை சுகமாக்கி என்னை மீட்டுக்கொண்டீர் உலகின் ஒளியே உத்தமர் துணையே உம்மையே துதித்து தினம் பாடுவேன்

4)எனது பெலவீனம் ஏற்றுக்கொண்டு பெலவானாய் என்னை மாற்றினீரே 

உம்மாலே சேலைக்குள் பாய்ந்து சென்றிட 

உன்னத ஆவியை அளித்தீரையா

Nandri yeasaiya ummaku

 நன்றி இயேசைய்யா உமக்கு



நன்றி இயேசைய்யா-உமக்கு 

நன்றி இயேசைய்யா 

1)தாயின் கருவில் தெரிந்தவரே நன்றி இயேசைய்யா 

தாங்கி ஏந்தி சுமப்பவரே நன்றி இயேசைய்யா 

2)இருளை ஒளியாய் மாற்றினீரே நன்றி இயேசைய்யா 

அருளை தினமும் தந்தீரே நன்றி இயேசைய்யா

3)கண்மணிபோல காப்பவரே நன்றி இயேசைய்யா 

கண்ணீரெல்லாம் துடைப்பவரே நன்றி இயேசைய்யா

4)குடும்ப வாழ்வை தந்தீரே நன்றி இயேசைய்யா 

குறைவை நிறைவாய் மாற்றினீரே நன்றி இயேசைய்யா 

5)பழைய குணத்தை மாற்றினீரே நன்றி இயேசைய்யா 

பரலோக வாழ்வை தந்தீரே நன்றி இயேசைய்யா

Karther ungal munae povar

 கர்த்தர் உங்கள் முன்னே போவார் 


கர்த்தர் உங்கள் முன்னே போவார் 

கலங்கிட தேவையில்லை 

ராஜா உங்கள் பின்னே காப்பார் 

பயப்பட தேவையில்லை 


ஜெயம் நமக்கே-2 இயேசுவால் ஜெயம் நமக்கே ஜெயம் நமக்கே-2 என்றும் ஜெயம் நமக்கே 

1)தடைகள் நீக்கும் இயேசு ராஜா

நம் முன்னே செல்லுகின்றார் 

தடைகள் யாவையும் அகற்றியே 

புது வழி நமக்காய் திறந்திடுவார் 


2)பகலில் மேக ஸ்தம்பத்தினால் 

பாதுகாத்து நடத்தும் தேவன் 

இயேசு என்றும் பெரியவரே 


3)சத்துரு உன்னை தொடர்ந்து வந்தால் 

செங்கடல் நடுவே அழித்திடுவார் 

மாராவை உனக்காய் மதுரமாக்கி 

மன்னாவை தினமும் தந்திடுவார் 


4)வறண்ட உந்தன் வாழ்வுதனை 

வளமாய் இயேசு மாற்றிடுவார் 

சூரியன் இனிமேல் மறைவதில்லை உன் துக்க நாட்கள் முடிந்துபோகும்

Ummaithan nambi vanthen

 உம்மைதான் நம்பி வந்தேன் இயேசப்பா



உம்மைதான் நம்பி வந்தேன் இயேசப்பா

உங்க ஆசீர்வாதம் எனக்கு இப்போதே தாங்கப்பா 

1)உமக்காகவே வாழ்ந்து கனி கொடுக்க

ஜீவ விருட்சமாய் என்னில் வாரும் இயேசப்பா 

2)தாய் தந்தை அன்பெல்லாம் மறைந்ததையா 

நான் நம்பினோர் அன்பெல்லாம் குறைந்ததையா 

3)என்னிடம் வருபவரை தள்ளேன் என்றீரே 

உம்மிடமே ஓடி வந்தேன் அன்பு இயேசப்பா 

4)பாவ இருள் என்னை வந்து மூடிக்கொள்ளாமல் 

ஜீவ ஒளியாய் என்னில் வாரும் இயேசப்பா 

5)தாகத்தால் என் ஆத்மா வாடுகின்றதே 

ஜீவ நதியாய் என்னில் வாரும் இயேசப்பா

Valzkai ennum oodathilae

 வாழ்க்கை என்னும் ஓடத்திலே 



1)வாழ்க்கை என்னும் ஓடத்திலே 

வருத்தத்தோடு போகையிலே 

வழியும் தெரியா நேரத்திலே 

வழித்துணையாய் யாருண்டு ?

ஓகோ ஒசன்னா ஆமென் ஏசைய்யா


2)கடலில் எலும்பும் ஓசையிலே 

கரையும் காணா நேரத்திலே 

ஒளியும் இல்லா நேரத்திலே 

கலங்கரை விளக்காய் யாருண்டு ?


3)தனிமை என்ற பயத்தினிலே 

இனிமை யில்லா வாழ்வினிலே 

நா வறண்ட உணர்வினிலே 

தாகம் தீர்க்க வருபவர் யார் ?


4)பொங்கி எழும்பும் கடலலையில்

சீறி வீசும் பெருங்காற்றில் 

ஓடம் கவிழ்ந்து மூழ்குகையில் ஜீவன் காக்க இயேசு வந்தார்

Kanmaniyae kanmaniyae

 கண்மணியே கண்மணியே கலங்காதே



கண்மணியே கண்மணியே கலங்காதே

கர்த்தர் இயேசு துணை உண்டு மறவாதே

1)தாய் தந்தை உன்னை மறந்தாலும் 

ஒரு போதும் இயேசு உன்னை மறப்பதில்லை 

உள்ளங்கைகளில் உன்னை வரைந்ததால் உறங்காமல் தூங்காமல் காத்துக் கொள்வார் 

2)மலைகளும் குன்றுகளும் அகன்றாலும் 

மானிடரின் அன்பெல்லாம் மறைந்தாலும் 

மனதுருக்கம் நிறைந்த அன்பு தெய்வம் 

மாறிடவே மாட்டார் எந்நாளுமே 

3)உன்னை விட்டு ஒருநாளும் விலகுவதில்லை உன்னை ஒரு நாளும் கை விடுவதில்லை உன்னுடன் கூடவே இயேசு இருப்பதால் 

உன் கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு 

4)என் சமூகம் உனக்கு முன்பாய் செல்லும் என்றார் 

இளைப்பாறுதல் எந்நாலும் தருவேனென்றார் 

வார்த்தையில் உண்மையுள்ள இயேசு தேவன் 

வானம் பூமி ஒழிந்தாலும் மாறிடமாட்டார்

Innal nannal manan yesu

 இந்நாள் நன்னாள் மன்னன்



இந்நாள் நன்னாள்-மன்னன் 

இயேசு பிறந்த நன்னாள்

1)மண்ணுயிரை மீட்டிடவே

மானிடனாய் அவதரித்தார் 

உலகின் ஒளியாய் நீ வாழ்ந்திடவே 

உலகில் தோன்றினார் பாலகனாய்-2 

2)ஜீவ வாழ்வை தந்திடவே 

ஜீவ தேவன் வந்துதித்தார் 

இருளை உன்னில் நீக்கிடவே இறைவன் இயேசு தோன்றினாரே-2

3)பரலோக வாழ்வை அளித்திடவே 

பரமன் இயேசு பிறந்தாரே 

பதினாயிரங்களில் சிறந்தவரை பாடிடுவோம் என்றும் கீதங்களே-2

Ennodu thangi irum

 என்னோடு தங்கியிரும் இயேசப்பா


என்னோடு தங்கியிரும் இயேசப்பா 

என்னை விட்டு போகாதிங்க இயேசப்பா

 பொழுதும் போயிற்று சாயங்காலமாயிற்று 


1)துணையாய் என்னுடன் நீரிருந்தால்

அணையாய் தீபமாய் நானிருப்பேன்-3 


2)ஆண்டவரே என்னுடன் நீரிருந்தால் 

ஆசிர்வாதமாய் நானிருப்பேன்-2


3)நல்லவரே என்னுடன் நீரிருந்தால்

நாளெல்லாம் செழிப்பாய் வாழ்ந்திருப்பேன்-2

 

4)இயேசுவே என்னுடன் நீரிருந்தால் 

இதயம் உன்னிலே மகிழ்ந்திருக்கும்-2


5)கர்த்தரே என்னுடன் நீரிருந்தால் 

கவலையில்லாமல் வாழ்ந்திருப்பேன்-2


6)தேவனே என்னுடன் நீரிருந்தால் 

தைரியமாக வாழ்ந்திருப்பேன்-2

Muzhangal paditu yesuvai

 முழங்கால் படியிட்டு இயேசுவை


முழங்கால் படியிட்டு இயேசுவை நோக்கி தினமும் ஜெபித்திடுவோம் ஜெபித்து ஜெயம் பெறுவோம்-நாம்-2

1)இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் இயேசுவின் வார்த்தையில் நிலைக்க வேண்டும் தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் ஜெபித்து ஜெயம் பெறுவோம் 

2)சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் சோதனை யாவையும் ஜெயிக்க வேண்டும் யாக்கோபை போல இராமுழுவதும் போராடி ஜெபித்து ஜெயம் பெறுவோம் 

3)மன்றாடி தினமும் ஜெபிக்க வேண்டும் மன்னவர் அருளை பெற்றிட வேண்டும் மோசேயை போல தேவ சமூகத்தில் மன்றாடி ஜெபித்து ஜெயம் பெறுவோம் 

4)கண்ணீரோடு தினம் ஜெபிக்க வேண்டும் கர்த்தரின் பாதத்தில் நின்றிட வேண்டும் அன்னாளை போல இதயம் ஊற்றியே அழுது ஜெபித்து ஜெயம் பெறுவோம்

Thursday, February 27, 2025

O manitha manitha

 ஓ மனிதா மனிதா வாழ்க்கை மாற



ஓ மனிதா மனிதா வாழ்க்கை மாற

இயேசுவை நம்பியே வா

உன் பாவம் போக்கும் உண்மை தெய்வம் இயேசு தானையா-2 மெய் 

1)நல்லதை செய்ய பலமுறை நினைத்தாய்

முயன்றும் முடியவில்லை விரும்பா தீமையை செய்து கொண்டிருப்பாய் காரணம் புரியவில்லை 

2)பக்தியினாலும் சக்தியினாலும் வென்றிட நினைத்திருந்தாய் தோல்வியே பலமுறை வந்ததினாலே தற்கொலை என நினைத்தாய் 

3)ஜீவனுள்ள இயேசு கிறிஸ்து உண்மை தெய்வமப்பா இயேசுவை நம்பின்னோர் வாழ்க்கை என்றும் இன்பமாய் மாறுமப்பா

Puthiya varusham

புதிய வருஷம் பிறந்தது


புதிய வருஷம் பிறந்தது

புதிய வாழ்வும் மலர்ந்தது

இயேசுவுக்காய் இன்னும் நான் வாழ்ந்திருப்பேன் 


1)சென்ற வருஷம் முழுவதும் எபிநேசரே

இந்த வருஷம் முழுமைக்கும் இம்மானுவேலே

நடத்திடுவார் நம்மை காத்திடுவார்-2

நாளெல்லாம் கூடயிருந்து ஆசீர்வதிப்பார் 

2)வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்

வழுவாமல் நித்தமும் நடத்திடுவாரே

பெரியவரே இயேசு உயர்ந்தவரே-2 புதிதான பாதைகளை திறந்திடுவாரே 

3)கோணலான பாதையெல்லாம் செவ்வையாக்குவார் வார்

கோலும் தடியும் கொண்டு தினம் தேற்றி நடத்துவார் 

நல்லவரே இயேசு வல்லவரே-2

நம்மை கிருபை நாளெல்லாம் தந்திடுவாரே 

4)தடைகளை நீக்கும் ராஜா முன்னே செல்கிறார் 

பயமில்லாமல் மகிழ்ச்சியோடு சென்றிடுவோமே 

பொக்கிஷமும் மறைந்த புதையல்களும்-2 பெரியவராம் இயேசு நமக்குத் தந்திடுவாரே

5)ஜாதிகளை சுதந்தரமாக்கி தருவார்

பூமியின் எல்லைகளை சொந்தமாக்குவார் 

கட்டப்படா தேவ ஆலயங்கள்-2

கர்த்தர் இயேசு நிறைவாக கட்டித் தருவாரே

Ummai aarathika engalai

 உம்மை ஆராதிக்க எங்களை


உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக்கொண்டீர்

உம்மை ஆராதிக்க எங்களை பிரித்தெடுத்தீர்

ஆராதிப்போம் தேவனே-உம்மை

ஆராதிப்போம் இயேசுவே

1)ஒருமனம் ஒற்றுமையாய் ஆராதிப்போம்

ஓயாமல் துதித்து ஆராதிப்போம்

தூதர் போற்றும் தேவனை மாந்தர் போற்றும் என்றென்றும் ஆராதிப்போம் 

2)ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்

ஆவியிலே மகிழ்ந்து ஆராதிப்போம்

அதிசயமானவரை ஆலோசனை கர்த்தரை என்றென்றும் ஆராதிப்போம்

3)சபையின் தலைவரை ஆராதிப்போம்

சபையின் முதல்வரை ஆராதிப்போம்

சாரோனின் ரோஜாவை சமாதான பிரபுவை என்றென்றும் ஆராதிப்போம்  

4)பரிசுத்த தேவனை ஆராதிப்போம் 

பரலோக ராஜாவை ஆராதிப்போம்

பாசமுள்ள நேசரை பள்ளத்தாக்கின் லீலியை என்றென்றும் ஆராதிப்போம்  

Magimai ellam umaku thaanaiya

 மகிமையெல்லாம் உமக்குத்தானைய்யா


மகிமையெல்லாம் உமக்குத்தானைய்யா-- என்

துதியும் ஸ்தோத்திரமும் உமக்குதானையா 


அல்லேலூயா--2 ஆராதனை --3


1)நேசரே நேசரே என் ஆத்மநேசரே

நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தந்திடுவேன்


2)பாசமே பாசமே எந்தன் பாசமே பாசத்தை

 என்னில் வைத்து மீட்டுக் கொண்டவரே 


3)அன்பரே அன்பரே அன்பு கூர்ந்தவரே 

அன்பினால் என்னைக் கவர்ந்த கொண்டவரே 


4)ரோஜாவே ரோஜாவே சரோனின் ரோஜாவே

சாந்த சொபியாய் என்னில் வந்தவரே 


5)புஷ்பமே புஷ்பமே லீலி புஷ்பமே

பள்ளத்தாக்கில் மலரும் லீலி புஷ்பம் நீரே